உசிலம்பட்டி பகுதியில் ஆடு, கோழி, நாய்,திருடும் கும்பல் அதிகரிப்பு

உசிலம்பட்டி பகுதியில் ஆடு, கோழி, நாய்,திருடும் கும்பல் அதிகரிப்பு
உசிலம்பட்டி பகுதியில் ஆடு, கோழி, நாய்,திருடும் கும்பல் அதிகரிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சுற்றிலும் உள்ள கிராமங்களில் சமீபகாலமாக இரவு நேரங்களில் திருட்டு அதிகரித்துள்ளது  பெரிய செம்மேட்டுப்பட்டி மெய்யணம்பட்டி ,கீரிப்பட்டி சீமானுத்து போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஆட்டுக்குட்டி கள் திருடப்படுவது அப்பகுதியில் உள்ள மக்களை பெரிதும் பீதியடையச் செய்து வருகின்றன கோழி மற்றும் விலை உயர்ந்த நாய் போன்றவை காணாமல் போவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது ஏற்கனவே கொரானா அச்சம்காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழைகளுக்கு இது பேரிழப்பாகும் .

இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயி ஒருவர் உசிலம்பட்டி காவல் துறையில் புகார் செய்துள்ளோம் விசாரணை நடத்தி வருகின்றனர் 30 ஆயிரம் மதிப்புள்ள ஆடுகளை நேற்று இரவு வீட்டில் வெளிப்புறத்தில் கட்டி வைத்திருந்தோம் காலையில் காணவில்லை உள்ளூர் கார்களின் உதவியோடு தான் இது திருடப்பட்டிருக்கும் சுற்றிலும் வீடுகள் உள்ளன கடன் வாங்கி வளர்த்த ஆடுகளை காணவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்

உங்கள் ஊர் உங்கள் பகுதி செய்திகளை பதிவிட 

தமிழ் ஒளி

9159555110

9880029401