விருதுநகர் அருகே விளைநிலத்தில் அபூர்வ சாமி சிலை

விருதுநகர் அருகே விளைநிலத்தில் அபூர்வ சாமி சிலை

*விளைநிலங்களில் தோண்டிய போது கிடைத்த அபூர்வ சிலை*

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பெருமாள்பட்டி ஆவுடையாபுரம் பகுதியில் கருப்பையா என்பவரின் விளைநிலத்தில் உழவு பணிக்காக தோண்டும்போது சுமார் 1200 ஆண்டுகள் பழமையான சுவாமி கற்சிலை ஒன்று கைகள் மட்டும் சேதமடைந்த நிலையில் கிடைத்துள்ளது. இந்த சிலையானது எங்குமே காணாத வண்ணம் மான் வாகனத்தில் 5அடி உயரத்தில் அம்மன் சிலையாக அவதரித்து அபூர்வ சிலையாக காட்சி தருகின்றது. மேலும் சற்று தொலைவில் புதைந்த நிலையில் நந்தி சிலை ஒன்றும் காணப்படுகிறது. 

இதனை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக  ஆச்சரியத்துடன் வந்து மிக பழமையான சிலையை அலங்காரம் செய்து  வணங்கி செல்கின்றனர்


உசிலை.P.M.தவசி