உசிலம்பட்டி அருகேமேலும் 8பேருக்கு கொரானா

உசிலம்பட்டி அருகேமேலும் 8பேருக்கு கொரானா
உசிலம்பட்டி அருகேமேலும் 8பேருக்கு கொரானா

:உசிலம்பட்டி பகுதியில் மும்பையில் இருந்து வந்த 8 நபர் களுக்கு குறைந்த வைரஸ் உறுதி.
 உசிலம்பட்டி மே 19 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செட்டியபட்டி கிராமத்திலுள்ள கிருஷ்ணா வேளாண் கல்லூரியில் வெளிமாநிலத்தில் இருந்து வரும் நபர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் முகமாக ஏற்படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை மற்றும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையிலிருந்து வந்த 154 பேருக்கு இம்முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் இதில் அனைவருக்கும் பரிசோதிக்கப்பட்ட நிலையில் 8 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இவர்கள் அனைவரையும் 3 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு மதுரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
 இவா்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு செல்ல மாவட்டநிா்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.