வாலாந்தூர் அங்காளஸ்வரி திருக்கோவில் கும்பாபிஷேகம் செய்தியாளர்களுக்கு 4 தேவர்கள் சார்பில் நன்றி

வாலாந்தூர் அங்காளஸ்வரி திருக்கோவில் கும்பாபிஷேகம் செய்தியாளர்களுக்கு 4 தேவர்கள் சார்பில் நன்றி
வாலாந்தூர் அங்காளஸ்வரி திருக்கோவில் கும்பாபிஷேகம் செய்தியாளர்களுக்கு 4 தேவர்கள் சார்பில் நன்றி

ஜூன் -14

வணக்கம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வாலாந்தூர் அருள் மிகு அங்காளஸ்வரி திருக்கோவில் புனரமைக்கப்பட்டு 101 அடி ராஜ் கோபுரத்துடன் கட்டப்பட்ட கோவிலுக்கு கடந்த ஜூன் 8ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது மூன்று நாட்களும் தொடர்ந்து விழா நடைபெற்றது 10 ம் தேதி காலை 9 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது ஹெலிகாப்டர் மூலம் பக்தர்களுக்கு மலர் தூவப்பட்டது சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வை உசிலம்பட்டி செய்தியாளர்கள் அனைத்து ஊடகங்களிலும் செய்தியாகவும் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்தனர்  வாலாந்தூர் அங்காளஸ்வரி புகழை உலகம் முழுவதும் அறியச் செய்த ஊடகவியலாளர்களுக்கு 4 தேவர் வகையறாக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் உசிலம்பட்டி திருப்பதி ஹோட்டல் ஏசி ஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டது 4 தேவர் வகையறாக்கள் சார்பில் தமிழ் ஒளி தமிழரசன் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்