பாஜக தொண்டர்கள் இந்தியன் தாத்தா வாக மாறவேண்டும் மகா சுசீந்திரன் பேச்சு

பாஜக தொண்டர்கள் இந்தியன் தாத்தா வாக மாறவேண்டும் மகா சுசீந்திரன் பேச்சு
பாஜக தொண்டர்கள் இந்தியன் தாத்தா வாக மாறவேண்டும் மகா சுசீந்திரன் பேச்சு

*மதுரை புறநகர் மாவட்ட பாஜகவின் செயற்குழு கூட்டம் கருமாத்தூரில் தொடங்கியது*
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக இன்று மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் செயற்குழு கூட்டம் நடத்த மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் வழிகாட்டுதல்படி ஏற்பாடு செய்யப்பட்டது அதேபோல் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் திரு மகா சுசீந்திரன் அவர்கள் தலைமையில் கருமாத்தூரில் புறநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் தொடங்கியது இதில் பேசிய மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதை ஒவ்வொரு தாமரை சேவகரும் கவணிக்க வேண்டும் தவறு செய்பவர்களை பொதுமக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் அதற்காக ஒவ்வொரு தாமரை சேவகனும் இந்தியன் தாத்தா போல விழிப்புடன் இருக்க வேண்டும் விரைவில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை பாரதீய ஜனதா கட்சி நிகழ்த்தும் விரைவில் தமிழகத்தில் தாமரை மலரும் என்றும் கூறினார்  இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு பழனிச்சாமி சோழவந்தான் மாணிக்கம் கலந்து கொண்டனர் இந்த கூட்டத்தில் ஏராளமான கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மாலை 5 மணிவரை கூட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது