மக்களை தேடி மாமன்ற உறுப்பினர்

மக்களை தேடி மாமன்ற உறுப்பினர்
மக்களை தேடி மாமன்ற உறுப்பினர்

மக்களைத்தேடி மாமன்றஉறுப்பினர்

இன்று மாலை மதுரை மாநகராட்சி 20 வது வார்டு பகுதியில் மாமன்ற உறுப்பினர் திருமதி.நாகசோதி சித்தன் தலைமையில் புதிய முயற்சியாக மகத்தான மாமன்ற உறுப்பினர் பொறுப்பை தந்த மக்களுக்காக...
மக்களைத் தேடி மாமன்ற உறுப்பினர் உங்கள் இல்லங்களில்...
சந்திக்கலாம்!  தீர்வு காணலாம்!! 
என்ற திட்டத்தின் கீழ் விளாங்குடி ராமமூர்த்தி நகரில் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம் 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி, C.நாகஜோதிசித்தன் அவர்கள் தலைமையில் 
நடைபெற்றது. இதில் விளாங்குடி இருபதாவது வார்டுக்கு உட்பட்ட ராமமூர்த்தி நகர் பகுதியில் குடியிருக்கும் மக்களை ஒருங்கிணைத்து குடியிருப்போர் நலச்சங்கம் உருவாக்குவது வீதிகள் தோறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பது மற்றும் மக்களின் அடிப்படைத் தேவையான சாலை குடிநீர் கழிப்பிட வசதிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவது மேலும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிரந்தர தீர்வு காணுவது என நிகழ்ச்சி நடைபெற்றது

மேலும் இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கூடல்புதூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு,சரவணன் அவர்கள் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தினார்
| #செய்தியாளர்