தயங்கி நிற்பவர்களால் எதையும் சாதிக்க முடியாது எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்

தயங்கி நிற்பவர்களால் எதையும் சாதிக்க முடியாது எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்
தயங்கி நிற்பவர்களால் எதையும் சாதிக்க முடியாது எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்
தயங்கி நிற்பவர்களால் எதையும் சாதிக்க முடியாது எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்
தயங்கி நிற்பவர்களால் எதையும் சாதிக்க முடியாது எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்

*தன்னம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு* தன்னம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று பிரபல எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு *அட்சய பாத்திரம்* மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு மூலம் ரோட்டோரத்தில் உள்ள  வறியவர்கள்  மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப் பெற்று 710 நாளை எட்டி உள்ளது. *அட்சய சேவா ரத்னா விருது* இதனை முன்னிட்டு  மதுரை சொக்கிகுளம் ஜேசி அரங்கில்  கொடையாளர்களுக்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கும் விழா நடைபெற்றது. மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஆர். சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா முன்னிலை வகித்தார். எஸ்.வி.எஸ் கடலை மாவு நிறுவன நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர் வாழ்த்துரை வழங்கினார் *எழுத்தாளர் லேனா தமிழ்வாணன்*. விழாவில் எழுத்தாளர் லேனா  தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 பேருக்கு அட்சய சேவா ரத்னா விருதினை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது உங்களைச் சுற்றி உங்களை தாழ்வாக கருதுபவர்களை விட உங்களை ஊக்கப்படுத்தும் நல்லவர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கு இரு சந்தர்ப்பங்களில் வேகம் வர வேண்டும். ஒன்று உங்களை குட்டுகிற  போது மற்றொன்று தட்டிக் கொடுக்கும் போது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் வேகம் வராவிட்டால் மனிதன் சாதிப்பது கடினம் *எதையும் சாதிக்கலாம்* தன்னம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சுக்காற்று. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே வரவேண்டும். குழந்தைகளுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை இளமையிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.